ஞாயிறு, 16 மே, 2010
சற்றே திரும்பிப் பாருங்கள்!!!
எனக்குப் பிடித்த எழுத்து இந்த நீலம். இதற்கு ஒரு காரணம் ஒன்று உண்டு. ஆனால் அதைச் சொல்ல அத்தனை ஒன்றும் அவசியமில்லை. காரணத்தைக் கேட்டால் இதென்ன பெரிய விஷயமா என்று கூறி விடுவீர்கள். ஆகையால் சொல்லாமல் இருப்பதே சரிஎன்று தோன்றுகிறது. நாம் அதிகம் நம் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் களமாக இந்த வலைப்பதிவுகள் உள்ளன. உண்மைதான். மனிதர்கள் யாரும் அதிகமாக அடுத்தவர் பேச்சைக் கேட்பதில்லை. நாம் ஏதேனும் சொல்ல முனைந்தால் நம்மில் பலர் எழுந்து சென்று விடுவார்கள். இந்த இணையத்தில் அதிக நேரம் செலவிட்டலோ நீ அதில் அப்படி என்ன செய்கின்றாய் என்று விசாரிப்பார்கள். அதுவும் அக்கறையால் அல்ல. ஒரு வித எரிச்சலின் வெளிப்பாடுதான் அதுவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)